மண்ணரசி ஈன்றெடுத்த
பெண்ணரசி
பூதேவி ஈன்ற
சீதேவி
சூரியனும் சுட அஞ்சும்
மாதரசி
இருந்தாள் ஓர்
அசோக வனம்
எனினும் ஆனது
சோக வனம்
புல்லுமே நடுங்கியது
அனுமதியின்றி தீண்டவே
கள்ளுண்ட இராவணனும்
நெருங்கிடவே அஞ்சினான்
மந்தியவன்
வாயுவின் வம்சமவன்
அஞ்சாது நெருங்கினான்
அன்னையை
பாடினான் ராமநாமமும்
தேவியவள் மகிழவே
காட்டினான் கணையாழி
தேற்றினான் அன்னையையும்
பெற்றான் தேவியிடம்
நெற்றிச்சுட்டியும்
பணிந்தான் அவள் பாதம்
காட்டினான் சிறு வீரம்
விஸ்வரூபம் எடுத்தான்
மரங்களை வேரோடு அழித்தான்
அன்னையும் கொண்டாள்
சிறு ஊக்கமும்
ஆசியும் வழங்கினாள்
அன்புடன் அன்னையும்
சிரஞ்சீவியவனும்
சிரம்சீவினான் இராக்கதரை
விதை பெற்றும் கொண்டான்
விண்ணிலும் ஏறி வந்தான்
அண்ணலையும் கண்டான்
இங்ஙனமே சொன்னான்
"கண்டேன் சீதையை"
செப்பினான்
அஞ்சனை மைந்தனும்
சேதி கேட்ட கணமே
விழி நீரும் சொரிய
தழுவினான் மார்போடு
வாயுவின் புத்திரனையும்
ஏற்றம் கொண்ட இராமனும்
பணித்தும் விட்டான் சேனையை
கட்டவே பாதையும்
ஆழிக்கடல் மீதிலே
செப்பவும் வேண்டுமா
அண்ணலும் செய்ததை
இராவணனை
இராவணம் செய்தான்
இராவணன்
(மேற்காணும் இம்மூவரிகள் எனதாசான் வாலியின் பொன்வரிகள்)
அண்ணலுக்கும் ஏற்றம் தந்தான்
அன்னைக்கும் மகிழ்வு தந்தான்
அஞ்சனை கர்ப்பத்தில் உதித்த
வாயு புத்திரன் மாருதி
******************************
அவன் தாழ் பணிவோம்
ஏற்றமும் கொள்வோம்
ஸ்ரீராம தூத மஹாதீர ருத்ரவீர்ய சமுத்பவ
அஞ்சனா கர்ப்ப ஸம்பூத வாயு புற்ற நமஸ்துதே
ஜெய் ஹனுமான் பாஹிமாம்
ஜெய் ஹனுமாம் ரட்ஷமாம்
Rs Av
பெண்ணரசி
பூதேவி ஈன்ற
சீதேவி
சூரியனும் சுட அஞ்சும்
மாதரசி
இருந்தாள் ஓர்
அசோக வனம்
எனினும் ஆனது
சோக வனம்
புல்லுமே நடுங்கியது
அனுமதியின்றி தீண்டவே
கள்ளுண்ட இராவணனும்
நெருங்கிடவே அஞ்சினான்
மந்தியவன்
வாயுவின் வம்சமவன்
அஞ்சாது நெருங்கினான்
அன்னையை
பாடினான் ராமநாமமும்
தேவியவள் மகிழவே
காட்டினான் கணையாழி
தேற்றினான் அன்னையையும்
பெற்றான் தேவியிடம்
நெற்றிச்சுட்டியும்
பணிந்தான் அவள் பாதம்
காட்டினான் சிறு வீரம்
விஸ்வரூபம் எடுத்தான்
மரங்களை வேரோடு அழித்தான்
அன்னையும் கொண்டாள்
சிறு ஊக்கமும்
ஆசியும் வழங்கினாள்
அன்புடன் அன்னையும்
சிரஞ்சீவியவனும்
சிரம்சீவினான் இராக்கதரை
விதை பெற்றும் கொண்டான்
விண்ணிலும் ஏறி வந்தான்
அண்ணலையும் கண்டான்
இங்ஙனமே சொன்னான்
"கண்டேன் சீதையை"
செப்பினான்
அஞ்சனை மைந்தனும்
சேதி கேட்ட கணமே
விழி நீரும் சொரிய
தழுவினான் மார்போடு
வாயுவின் புத்திரனையும்
ஏற்றம் கொண்ட இராமனும்
பணித்தும் விட்டான் சேனையை
கட்டவே பாதையும்
ஆழிக்கடல் மீதிலே
செப்பவும் வேண்டுமா
அண்ணலும் செய்ததை
இராவணனை
இராவணம் செய்தான்
இராவணன்
(மேற்காணும் இம்மூவரிகள் எனதாசான் வாலியின் பொன்வரிகள்)
அண்ணலுக்கும் ஏற்றம் தந்தான்
அன்னைக்கும் மகிழ்வு தந்தான்
அஞ்சனை கர்ப்பத்தில் உதித்த
வாயு புத்திரன் மாருதி
******************************
அவன் தாழ் பணிவோம்
ஏற்றமும் கொள்வோம்
ஸ்ரீராம தூத மஹாதீர ருத்ரவீர்ய சமுத்பவ
அஞ்சனா கர்ப்ப ஸம்பூத வாயு புற்ற நமஸ்துதே
ஜெய் ஹனுமான் பாஹிமாம்
ஜெய் ஹனுமாம் ரட்ஷமாம்
Rs Av

No comments:
Post a Comment