Monday, 26 August 2013

மண்ணரசி ஈன்றெடுத்த
பெண்ணரசி

பூதேவி ஈன்ற
சீதேவி

சூரியனும் சுட அஞ்சும்
மாதரசி

இருந்தாள் ஓர்
அசோக வனம்
எனினும் ஆனது
சோக வனம்

புல்லுமே நடுங்கியது
அனுமதியின்றி தீண்டவே

கள்ளுண்ட இராவணனும்
நெருங்கிடவே அஞ்சினான்

மந்தியவன்
வாயுவின் வம்சமவன்

அஞ்சாது நெருங்கினான்
அன்னையை

பாடினான் ராமநாமமும்
தேவியவள் மகிழவே

காட்டினான் கணையாழி
தேற்றினான் அன்னையையும்

பெற்றான் தேவியிடம்
நெற்றிச்சுட்டியும்

பணிந்தான் அவள் பாதம்
காட்டினான் சிறு வீரம்

விஸ்வரூபம் எடுத்தான்
மரங்களை வேரோடு அழித்தான்

அன்னையும் கொண்டாள்
சிறு ஊக்கமும்

ஆசியும் வழங்கினாள்
அன்புடன் அன்னையும்

சிரஞ்சீவியவனும்
சிரம்சீவினான் இராக்கதரை

விதை பெற்றும் கொண்டான்
விண்ணிலும் ஏறி வந்தான்

அண்ணலையும் கண்டான்
இங்ஙனமே சொன்னான்

"கண்டேன் சீதையை"
செப்பினான்
அஞ்சனை மைந்தனும்

சேதி கேட்ட கணமே
விழி நீரும் சொரிய

தழுவினான் மார்போடு
வாயுவின் புத்திரனையும்

ஏற்றம் கொண்ட இராமனும்
பணித்தும் விட்டான் சேனையை

கட்டவே பாதையும்
ஆழிக்கடல் மீதிலே

செப்பவும் வேண்டுமா
அண்ணலும் செய்ததை

இராவணனை
இராவணம் செய்தான்
இராவணன்

(மேற்காணும் இம்மூவரிகள் எனதாசான் வாலியின் பொன்வரிகள்)

அண்ணலுக்கும் ஏற்றம் தந்தான்
அன்னைக்கும் மகிழ்வு தந்தான்
அஞ்சனை கர்ப்பத்தில் உதித்த
வாயு புத்திரன் மாருதி

******************************
அவன் தாழ் பணிவோம்
ஏற்றமும் கொள்வோம்

ஸ்ரீராம தூத மஹாதீர ருத்ரவீர்ய சமுத்பவ
அஞ்சனா கர்ப்ப ஸம்பூத வாயு புற்ற நமஸ்துதே

ஜெய் ஹனுமான் பாஹிமாம்
ஜெய் ஹனுமாம் ரட்ஷமாம்

Rs Av


No comments:

Post a Comment