Friday, 23 August 2013

முக்காலம்

பிறந்தேன் நேற்று
உயிர்த்தேன் இன்று
மரிப்பேன் நாளை

முக்காலம் மூன்றில்
இடைக்காலம் வருவாய்

தருவாய் நீயும்
அடைக்கலம்

ஆகும் நெடுங்களம்
சிறுகுளம்
பெறுவேன் நானும்
பிறவிப்பயன்

ஆகும் சுகமாய்
கைப்பிடி மனம்
கனமும் கணத்தில்
இறகாகும்
கடப்பேன் நானும்
எளிதாக

மூன்றாம் காலம்
நெருங்குதே கண்ணே
சருகாகும் முன்னே
காத்திடுவாய் பெண்ணே

இடைக்காலத்தில் இனியவளை நோக்கி
இவண்
Rs Av

No comments:

Post a Comment