Monday, 26 August 2013

என்னவென்று சொல்ல


இன்னதென்று இல்லை
என்னவென்று கூற
உந்தனன்பை சொல்ல
வரிகளொன்றும் இல்லையே

உயிர் துளிர்த்தது அன்பில்
பல வடிவெடுத்தாய் என்னில்

காணும் யாவும் உன் பிம்பம்
மனம் லயித்தது அதில் இன்பம்

விழி மூடினால் நீயே
அகத்திலும் கூவினாய்
குயில் போலவும் நீயே

நாளங்களும் மீட்டின
உன் நாமமே வீணையின் தந்தியாய்

செல்லவும் மறுக்குதே
வேறெதிலும் மனமுமே

விடுக்கிறேன் தூதுமாய்
தென்றலை இக்கணம்

தந்தியாய் பாவியே
விரைவாய் நீ என்னிடம்

உன்னவன்
இவண்
Rs Av

https://www.facebook.com/AnbenumNadhiyinile

http://anbenumnadhiyinile.blogspot.in

No comments:

Post a Comment