இன்னதென்று இல்லை
என்னவென்று கூற
உந்தனன்பை சொல்ல
வரிகளொன்றும் இல்லையே
உயிர் துளிர்த்தது அன்பில்
பல வடிவெடுத்தாய் என்னில்
காணும் யாவும் உன் பிம்பம்
மனம் லயித்தது அதில் இன்பம்
விழி மூடினால் நீயே
அகத்திலும் கூவினாய்
குயில் போலவும் நீயே
நாளங்களும் மீட்டின
உன் நாமமே வீணையின் தந்தியாய்
செல்லவும் மறுக்குதே
வேறெதிலும் மனமுமே
விடுக்கிறேன் தூதுமாய்
தென்றலை இக்கணம்
தந்தியாய் பாவியே
விரைவாய் நீ என்னிடம்
உன்னவன்
இவண்
Rs Av
https://www.facebook.com/AnbenumNadhiyinile
http://anbenumnadhiyinile.blogspot.in
No comments:
Post a Comment