குருஷேத்ரகளம்
எங்கும் இரத்தமயம்
பங்காளி இங்கு
ஆனான் பகையாளி
அண்ணனை வீழ்த்தினான்
இளவலும் கண்ணனின் துணையுடன்
குந்தியின் தலைமகன்
தர்மத்தின் காவலன் கர்ணனும்
வீழ்ந்தான் ஒருகணம்
பிரியவில்லை உயிரும்
காத்திருந்தாள் தர்மதேவதையும்
செய்த தர்மம்
கர்ணன் தலைகாக்க
தர்மம் வெல்லவே
கண்ணனும் பூண்டான்
மாறுவேடமும்
யாசித்தான் பரந்தாமன்
குந்தியின் தலைமகனிடம்
வேண்டினான் கர்ணனும்
இருப்பதைக் கேட்டு
நிறைவு கொள்கவென்று
நீலவண்ணனும் யாசித்தான்
தர்மத்தின் பலனை
தாரை வார்த்தான் சூரியமைந்தன்
பலனனைத்தும் சங்குசக்ரதாரிக்கு
மறுகணம் காட்டினான்
விஸ்வரூபம் கண்ணனும்
பெரும்பேறு பெற்றான்
கர்ணனும் அக்கணமே
இளவல் பார்த்தனும்
விட்டான் பாணமும்
மறுகணம் நீங்கினான் மண்ணிலே
ஏறினான் விண்ணிலே கர்ணனும்
தர்மம் வெல்ல
கர்ணனும் தலைகொடுத்தான்
தீர்த்தான் துரியோதனுக்கு
செஞ்சோற்றுக்கடனும்
இலக்கணம் அவனே
நட்புக்கு நாயகன் அவனே
Rs Av
எங்கும் இரத்தமயம்
பங்காளி இங்கு
ஆனான் பகையாளி
அண்ணனை வீழ்த்தினான்
இளவலும் கண்ணனின் துணையுடன்
குந்தியின் தலைமகன்
தர்மத்தின் காவலன் கர்ணனும்
வீழ்ந்தான் ஒருகணம்
பிரியவில்லை உயிரும்
காத்திருந்தாள் தர்மதேவதையும்
செய்த தர்மம்
கர்ணன் தலைகாக்க
தர்மம் வெல்லவே
கண்ணனும் பூண்டான்
மாறுவேடமும்
யாசித்தான் பரந்தாமன்
குந்தியின் தலைமகனிடம்
வேண்டினான் கர்ணனும்
இருப்பதைக் கேட்டு
நிறைவு கொள்கவென்று
நீலவண்ணனும் யாசித்தான்
தர்மத்தின் பலனை
தாரை வார்த்தான் சூரியமைந்தன்
பலனனைத்தும் சங்குசக்ரதாரிக்கு
மறுகணம் காட்டினான்
விஸ்வரூபம் கண்ணனும்
பெரும்பேறு பெற்றான்
கர்ணனும் அக்கணமே
இளவல் பார்த்தனும்
விட்டான் பாணமும்
மறுகணம் நீங்கினான் மண்ணிலே
ஏறினான் விண்ணிலே கர்ணனும்
தர்மம் வெல்ல
கர்ணனும் தலைகொடுத்தான்
தீர்த்தான் துரியோதனுக்கு
செஞ்சோற்றுக்கடனும்
இலக்கணம் அவனே
நட்புக்கு நாயகன் அவனே
Rs Av